No results found

    வெண்டிபாளையம் ரெயில்வே கேட் 15 நாட்கள் மூடப்படுகிறது


    ஈரோட்டில் இருந்து சேலம், சென்னை செல்லும் ெரயில்கள் வெண்டி பாளையம் ரெயில்வே கேட் கடந்து செல்ல வேண்டும். மேலும் இந்த வழியாகத்தான் வெண்டி பாளையத்தில் உள்ள குப்பை கிடங்கிற்கு தினமும் பலமுறை லாரிகள் சென்று வருகின்றன. இது தவிர வெண்டி பாளையம், கோண வா ய்க்கால் உள்ளிட்ட பகுதிக ளில் உள்ள நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் இந்த ரெயில்வே கேட்டை கடந்து தான் மாநகர் பகுதிக்குள் வர வேண்டும். எனவே இந்த பகுதி முக்கியமான போக்குவரத்து பகுதியாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழித்தடத்தில் ரெயில் தண்டவாளம் பராமரிப்பு, ஜல்லி கொட்டுதல், சிக்னல் சரிபார்த்தல் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு வசதியாக வெண்டி பாளையம் ரெயில்வே கேட் இன்று முதல் வருகின்ற 29-ந் தேதி வரை 15 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் வெண்டி பாளையம் மற்றும் நாமக்கல் மாவட்டம் செல்லும் இருச க்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் மோளகவுண்டன்பாளையம், சோலார், நீல்கிரீஸ் வழியாக திருப்பி விட ப்பட்டுள்ளது. இது தொடர்பான நோட்டீஸ் அந்த பகுதியில் ஒட்டப்ப ட்டுள்ளது.

    Previous Next

    نموذج الاتصال